குவகாத்தி: அசாம் யானைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்ய வரும் குழுவினருக்கு அனுமதி வழங்கி, பாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசுக்கு குவகாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருக்கும் அசாம் மாநிலத்திலிருந்து அழைத்துவரப்பட்ட யானைகளை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்ய அசாம் அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த குவகாத்தி நீதிமன்ற நீதிபதி சுமன் ஷியாம் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் உள்ள யானைகளை நேரில் பார்வையிட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல் கிடைத்த மூன்ற நாள்களில் தமிழகம் சென்று யானைகளை ஆய்வ செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டின் முதன்மைச் செயலருக்கும், காவல்துறை டிஜிபிக்கும் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் அறிவுறுத்தலில், அசாமிலிருந்து வரும் குழுவினர், யானைகளை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்ய அனுமதி வழங்கி, குழுவினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.