செப்.19-ல் எகிப்து செல்கிறார் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசுமுறைப் பயணமாக செப்டம்பர் 19ஆம் தேதி எகிப்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசுமுறைப் பயணமாக செப்டம்பர் 19ஆம் தேதி எகிப்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் ஜெனரல் மொஹமத் ஜாக்கியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
மேலும், இரு அமைச்சர்களும் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வார்கள், ராணுவ ஈடுபாடுகளைத் தீவிரப்படுத்துவதற்கான புதிய முயற்சிகளும், ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவார்கள்.
இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் எகிப்து குடியரசுத் தலைவர் அப்தெல் பத்தா அல் சிசியையும் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.