இந்தியா

நாட்டில் புதிதாக 5,443 பேருக்கு கரோனா

DIN

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,443 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்தியில்,

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,443 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 26 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் பலியாகியுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 5,291 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 4,39,78,271 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு 46,342 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 15.85 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், மொத்தம் 2.17 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT