அக்.1 முதல் 5ஜி அலைக்கற்றை சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார் 
இந்தியா

அக்.1 முதல் 5ஜி அலைக்கற்றை சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்

நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஜி அலைக்கற்றை சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளார். 

DIN

நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஜி அலைக்கற்றை சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளார். 

நாட்டில் 5ஜி அலைக்கற்றை சேவையைக் கொண்டுவருவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜியோ நிறுவனத்தின் 45ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி தீபாவளி முதல் நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி அலைக்கற்றை சேவை கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நாட்டில் 5ஜி அலைக்கற்றை சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவையானது பின்னர் மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் 5ஜி தொழில்நுட்பம் 20 முதல் 30 மடங்கு வரை அதிக வேகத்தில் தகவல் பரிமாற்றத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT