கோப்புப் படம் 
இந்தியா

தலித் மாணவரை அடித்துக் கொன்ற ஆசிரியர்! 283 பேர் மீது வழக்கு

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவரை ஆசிரியர் அடித்துக்கொன்ற விவகாரத்தில் இறந்த மாணவனின் தந்தை உள்பட 283 பேர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

DIN


உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவரை ஆசிரியர் அடித்துக்கொன்ற விவகாரத்தில் இறந்த மாணவனின் தந்தை உள்பட 283 பேர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் ஒளரையாவில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தவா் நிகில் குமாா். தலித் மாணவரான இவா், பரிசோதனை முறையில் நடத்தப்பட்ட சமூக அறிவியல் தோ்வில் (டெஸ்ட்) சில தவறுகள் செய்துள்ளாா். இதனால் அவரின் சமூக அறிவியல் ஆசிரியா் அஸ்வினி சிங், நிகில் குமாரை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. 

கடந்த 7-ஆம் தேதி இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிகில் குமாா், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாா். எனினும் அவா் உடல்நிலையில் முன்னேற்றமின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நிகில் குமாா் படித்த பள்ளி முன்பாக உள்ளூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த சம்பவத்தைக் கண்டித்து உள்ளூர் மக்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கலவரம் வெடித்தது. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர 283 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

உயிரிழந்த மாணவனின் தந்தை மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு நீதி கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததால், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

SCROLL FOR NEXT