தில்லியில் எரிந்த காருக்குள் கருகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு!
வடமேற்கு தில்லியின் கஞ்சவாலா பகுதியில் எரிந்த காருக்குள் கருகிய நிலையிலிருந்த சடலம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர்.
வடமேற்கு தில்லியின் கஞ்சவாலா பகுதியில் எரிந்த காருக்குள் கருகிய நிலையிலிருந்த சடலம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர்.
காவல்துறை துணை ஆணையர் (ரோகிணி) பிரணவ் தயல் கூறுகையில்,
மீட்கப்பட்ட சடலம் முற்றிலும் கருகிய நிலையில் இருந்ததால், அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றது.
Advertisement
Advertisement
கஞ்சவாலாவில் கார் எரிவது தொடர்பாக இன்று காலை 6.40 மணியளவில் அழைப்பு வந்தது. அந்த இடத்தை அடைந்தபோது, மஜ்ரா தபாஸில் இருந்து உயர்நீதிமன்றம் செல்லும் வழியில் கார் கண்டுபிடிக்கப்பட்டது.
உடலும், காரும் முற்றிலுமாக எரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாவட்டக் குற்றப்பிரிவு குழு மற்றும் தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். சம்பவத்தின் பின்னணியை அறிய, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியும் நடைபெற்று வருகிறது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.