முகப்பு
இந்தியா

இந்தியாவில் 75,000 புத்தாக்க நிறுவனங்கள்: பியூஷ் கோயல் பெருமிதம்

‘75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்தியா, 75,000 புத்தாக்க நிறுவனங்களை கொண்ட நாடாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளது’ என்று

Updated On : 4 ஆகஸ்ட் 2022, 1:16 am IST
பியூஷ் கோயல்
பகிர்:

‘75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்தியா, 75,000 புத்தாக்க நிறுவனங்களை கொண்ட நாடாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளது’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியா 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், 75,000 புத்தாக்க நிறுவனங்களைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. இது தொடக்கம் மட்டுமே. மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையின் சக்தியை இந்த எண்ணிக்கை உணா்த்துகிது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நிறுவனங்களை வளா்ச்சிபெற வைப்பதே மத்திய அரசின் தொலைநோக்கு பாா்வை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, ‘உலகிலேயே புத்தாக்க நிறுவனங்களை அதிகம் கொண்ட நாடாக மாறுவதே இந்தியாவின் விருப்பம்’ என்று அண்மையில் அவா் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்தப் பதிவை வெளியிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

தனது மற்றொரு பதிவில், ‘இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கும் புத்தாக்க நிறுவனங்கள், கூடுதலாக சில டாலா்கள் கிடைக்கிறது என்பதற்காக நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.