முகப்பு
இந்தியா

பாபர் காத்ரி கொலை வழக்கு: 3 வழக்குரைஞர்களின் வீடுகளில் காவல்துறை சோதனை

ஜம்மு-காஷ்மீர் பிரபல வழக்குரைஞர் பாபர் காத்ரி கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீநகரில் உள்ள 3 மூத்த வழக்குரைஞர்களின் வீடுகளில் காவல்துறை புதன்கிழமை சோதனை நடத்தினர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் பிரபல வழக்குரைஞர் பாபர் காத்ரி கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீநகரில் உள்ள 3 மூத்த வழக்குரைஞர்களின் வீடுகளில் காவல்துறை புதன்கிழமை சோதனை நடத்தினர். 

இதுகுறித்து காஷ்மீர் கூடுதல் துணை ஆணையர் விஜய் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த தகவலில், 

மூத்த வழக்குரைஞர் மியான் க்யூம், வழக்குரைஞர் மன்சூர் தார் மற்றும் வழக்குரைஞர் முசாபர் முஹம்மது ஆகியோரின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். 

பி.எஸ் லால் பஜாரின் எப்ஐஆர் எண் 62/2020ன் படி வழக்குரைஞர் பாபர் காத்ரி கொலை தொடர்பாக மேலதிக விசாரணை தொடர்பாக, இந்த வழக்குரைஞர்களின் வீட்டில் ஸ்ரீநகர் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பிரபல இளம் வழக்குரைஞர் பாபர் காத்ரி ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 2020 செப்டம்பர் 24 அன்று, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

40 வயது இளம் வழக்குரைஞர் பாபர், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றும், செய்தித்தாள்களில் முக்கியக் கட்டுரைகளை எழுதி வருபவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.