முகப்பு
இந்தியா

சர்வதேச செவிலியர்கள் நாள்: ராகுல் காந்தி வாழ்த்து

உலக செவிலியர் நாளையொட்டி, சுகாதாரத் துறையின் முதுகெலும்பான செவிலியர்களுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

Updated On : 12 மே 2022, 11:25 am IST
பகிர்:


உலக செவிலியர் நாளையொட்டி, சுகாதாரத் துறையின் முதுகெலும்பான செவிலியர்களுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

உலக செவிலியர் அமைப்பு இந்நாளை 1965 -ஆம் ஆண்டிலிருந்து அனுசரித்து வருகிறது. ஜனவரி 1974 -இல், நவீன செவிலியர் பணிக்கான நிறுவனராகக் கருதப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேள் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சர்வதேச செவிலியர் நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

1974 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்கா, கனடாவில் மே 9 முதல் மே 15 வரை செவிலியர் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

Advertisement

Advertisement

சுகாதாரத் துறைக்கும், சமூகத்திற்கு  தன்னலமற்ற சேவைகளை வழங்கி வரும் செவிலியர்களை கொண்டாடும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 

2022 ஆம் ஆண்டு சர்வதேச செவிலியர் நாளில், “தலைமைக்கான ஓர் குரல் - சர்வதேச சுகாதார பாதுகாப்புக்கு செவிலியர் பணியில் முதலீடு மற்றும் மரியாதைக்குரிய உரிமைகள்’’ என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி செவிலியர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  நமது சுகாதார கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்கும் செவிலியர்களுக்கு தலை வணங்குகிறேன்.

செவிலியர்களின் அர்ப்பணிப்புக்கும், கடின உழைப்பும் நம்மை ஆரோக்கியமாக வைத்து காத்து வருகின்றனர். அவர்களுடைய தன்னமில்லா சேவைகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.