முகப்பு
இந்தியா

நவ.10-ல் ஒடிசா செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு! 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நவம்பர் 10-ம் தேதி ஒடிசா செல்லவிருப்பதாக, ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:43 AM
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
பகிர்:

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நவம்பர் 10-ம் தேதி ஒடிசா செல்லவிருப்பதாக, ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த ஜூலையில் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, அவர் தனது சொந்த மாநிலத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும். 

நவம்பர் 10ஆம் தேதி பிற்பகல் புவனேஸ்வர் சென்றடையும் குடியரசுத் தலைவர், ஆளுநர் மாளிகையில் தங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அடுத்த நாள், புது தில்லி திரும்புவதற்கு முன்னதாக புரியில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஒடிசா ஆளுநர் மாளிகை அலுவலகத்திற்கு, குடியரசுத் தலைமை செயலகம் தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →