முகப்பு
இந்தியா

திகார் சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்

தில்லி திகார் சிறை டிஜிபி சந்தீப் போயலை அதிரடியாக மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

தில்லி திகார் சிறைத்துறை டிஜிபி சந்தீப் போயலை அதிரடியாக மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து அந்த பொறுப்புக்கு சஞ்சய் பெனிவால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது அம்பலமானதையடுத்து டிஜிபி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். 

திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் மூலமாக ரூ.12.5 கோடி லஞ்சம் வாங்கியதாக சந்தீப் கோயல் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சவாலான பணிக்கு அரசு தன்னைத் தேர்ந்தெடுத்தது எனது அதிர்ஷ்டம் என்று சஞ்சய் பெனிவால் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.