முகப்பு
இந்தியா

உ.பி.யில் துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 3 பேர் பலி; 50-க்கும் மேற்ப்பட்டோர் காயம்

உத்திர பிரதேச மாநிலம் பதோஹியில் நேற்று (அக்.2) நடந்த துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர் மற்றும் 50-க்கும் மேற்ப்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர்.

Updated On : 3 அக்டோபர் 2022, 11:39 am IST
பகிர்:

உத்திர பிரதேச மாநிலம் பதோஹியில் நேற்று (அக்.2) நடந்த துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர் மற்றும் 50-க்கும் மேற்ப்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை(அக்.3) மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் துர்கா பூஜை பந்தல் தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்ததுள்ளது.

இந்த  தீ விபத்தில் 12 வயது சிறுவன், 10 வயது சிறுவன் மற்றும் 45 வயது பெண் ஆகியோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இதில், 22-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி, வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கு குறைந்த மின்னழத்தம் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments