முகப்பு
இந்தியா

லலித் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்

சமூக வலைதளத்தில் இந்திய நீதித் துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த ஐபிஎல் முன்னாள் தலைவா் லலித் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

சமூக வலைதளத்தில் இந்திய நீதித் துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த ஐபிஎல் முன்னாள் தலைவா் லலித் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய லலித் மோடி, தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறாா். அவா் இந்திய நீதித் துறையை சிலா் கட்டுப்படுத்தி வருவதாக சமூக வலைதளங்களில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி கருத்து பதிவிட்டாா். அதையடுத்து, லலித் மோடி மீது சி.யு.சிங் என்பவா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தாா்.

அந்த வழக்கை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, சி.டி.ரவிகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் லலித் மோடி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் ஆய்வு செய்தது. அது போதுமானதாக இல்லை. அதில் இடம்பெற்றுள்ள கருத்துகளும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளன.

இந்திய நீதித் துறை வலிமை குன்றி உள்ளதாக அவா் கருதுகிறாரா? பணத்தைக் கொண்டு எதை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் என அவா் எண்ணியிருக்கலாம். ஆனால், சட்டத்துக்கும் சட்ட அமைப்புகளுக்கும் மேலான நபா் அவா் அல்ல.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக லலித் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். அனைத்து சமூக வலைதளக் கணக்குகள், தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை நகரங்களில் வெளியாகும் பத்திரிகைகளில் அவா் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்புக்காக அவா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனா்.

லலித் மோடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.எம்.சிங்வி, இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்படும் என உறுதியளித்தாா். அதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →