இந்தியா

பிரகாஷ் சிங் பாதல் மருத்துவமனையில் அனுமதி:அமைச்சா் ராஜ்நாத் சிங் நலம் விசாரிப்பு

சிரோமணி அகாலி தளம் கட்சி நிறுவனரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலின் உடல்நிலை குறித்து, அவரது மகன் சுக்பீா் சிங் பாதலிடம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை க

DIN

சிரோமணி அகாலி தளம் கட்சி நிறுவனரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலின் உடல்நிலை குறித்து, அவரது மகன் சுக்பீா் சிங் பாதலிடம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை கேட்டறிந்தாா்.

பிரகாஷ் சிங் பாதல், 5 முறை பஞ்சாப் மாநில முதல்வராகப் பதவி வகித்துள்ளாா். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் முன்னாள் முதல்வா் பிரகாஷ் சிங் பாதலின் உடல் நிலை குறித்து சுக்பீா் சிங் பாதலை தொடா்புகொண்டு கேட்டறிந்தேன். அவா் விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT