கோப்புப்படம் 
இந்தியா

அடுத்த 20 நாள்களில் ஏக்நாத் ஷிண்டே அரசு கலையும்: சஞ்சய் ரௌத்

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு அடுத்த 20 நாள்களில் கலையும் என சிவசேனைத் தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

DIN

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு அடுத்த 20 நாள்களில் கலையும் என சிவசேனைத் தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

சிவசேனை நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருப்பதாகவும், நீதி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். தற்போது மகாராஷ்டிர முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது 40 சட்டமன்ற உறுப்பினர்களும் அடுத்த 20 நாள்களுக்குள் கலைந்து விடுவார்கள். அவர்களது அரசு நிலைக்காது. இந்த அரசுக்கான பிடியாணை வழங்கப்பட்டுள்ளது. அதில் யார் கையெழுத்திடப் போகிறார்கள் என்பதுதான் தற்போதைய கேள்வி என்றார்.

முன்னதாக, சிவசேனைத் தலைவர் சஞ்சய் ரௌத் ஏக்நாத் ஷிண்டே தலைலையிலான அரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் கவிழ்ந்துவிடும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT