ராகுல் காந்தி (கோப்புப் படம்) 
இந்தியா

பணக்காரர்களுக்கு உதவவே ஜிஎஸ்டி அமலானது: ராகுல் குற்றச்சாட்டு

நாட்டில் செல்வந்தர்களுக்கு உதவும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

DIN


நாட்டில் செல்வந்தர்களுக்கு உதவும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

கர்நாடகத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கர்நாடகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. 

கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 

இப்போது 2 - 3 கோடீஸ்வரர்கள் மீது மட்டுமே அரசின் கவனம் உள்ளது. ஆனால், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறிய தொழில்கள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. வங்கிகளிலிருந்து கோடீஸ்வரர்கள் எளிதில் கடன் பெற முடிகிறது. செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அரசு அதனை தள்ளுபடி செய்கிறது. ஆனால் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படுவதில்லை.
 
ஐந்து விதமான வரி விதிப்பு மிகவும் சிக்கலானது. நாட்டில் பாதி மக்களுக்கு வரியை எப்போது எப்படி தாக்கல் செய்ய வேண்டும் என்று புரியவில்லை. மிகப்பெரிய செல்வந்தர்கள் தனி கணக்காளர்களை வைத்துள்ளனர். ஆனால், சிறிய தொழில் செய்பவர்களுக்கு அது சாத்தியமில்லை. அதனால் சிறுதொழில்கள் தேக்கமடைகின்றன. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றி அமைப்போம். மிக எளிமையான சிறிய வரிவிதிப்பை ஒரே வரி முறையாக கொண்டுவரப்படும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT