ராஜஸ்தான் அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இன்று நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை கூறினார்.
கலதேரா பணவீக்க நிவாரண முகாமுக்கு வருகை தந்த கெலாட் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
கெலாட் அரசாங்கத்தின் லட்சியமான பணவீக்க நிவாரண முகாம் திட்டம் பத்து முக்கியமான திட்டங்களின் கீழ் பதிவு செய்வதற்காக திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு உத்தரவாத அட்டை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.