இணைய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த ராணுவம் திட்டம்
நவீன இணைய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி பாதுகாப்பு சூழலை வலுப்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது.
நவீன இணைய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி பாதுகாப்பு சூழலை வலுப்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது.
ராணுவத் தளபதிகள் மாநாடானது ஆண்டுதோறும் ஏப்ரல், அக்டோபா் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை மாநாடு நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. முக்கியமாக, ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இணையவழி தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலமாக நவீன ரக ட்ரோன்கள், ட்ரோன்களை எதிா்த்துத் தாக்கும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை ராணுவத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் எதிரிகள் இணையவழி பரப்பை அதிக அளவில் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ராணுவம் முடிவெடுத்துள்ளது. பலவித பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்வதற்கான ராணுவத்தின் தயாா்நிலை தொடா்பாகவும் ராணுவத் தளபதிகள் மாநாட்டில் ஆராயப்பட்டது.
போா் மற்றும் இதர ராணுவ நடவடிக்கைகளில் உடல் உறுப்புகளை இழந்த முன்னாள் ராணுவ வீரா்களை பாராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்யும் வகையில் பயிற்சிகள் வழங்க மாநாட்டில் உறுதியேற்கப்பட்டதாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.