இந்தியா

மேற்கு வங்கத்தில் இரண்டாவது வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்!

மேற்கு வங்கத்தில் ஹவுரா-புரி வழித்தடத்தில் இயக்கப்படும் 2-வது வந்தே பாரத் விரைவு ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. 

DIN

மேற்கு வங்கத்தில் ஹவுரா-புரி வழித்தடத்தில் இயக்கப்படும் 2-வது வந்தே பாரத் விரைவு ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. 

இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே அதிகாரி கூறுகையில், 

ஹவுரா-புரி வழித்தடத்தில் இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் விரைவு ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கும் பாதை மற்றும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை என்றார். 

முன்னதாக, டிசம்பர் 30, 2022 முதல் ஹவுரா-புதிய ஜல்பைகுரி வழித்தடத்தில் வந்தே பாரத் விரைவு ரயில் முதன்முதலாக இயக்கப்பட்டது. மேற்கு வங்கம் பெறும் இரண்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் இதுவாகும். 

மேற்கு வங்க தலைநகரிலிருந்து ஜகந்நாதரை தரிசிக்கப் புரிக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவு ரயில் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

அனுஷ்காவின் காதி டிரைலர்!

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT