வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று மாலை வடமேற்கு திசையில் நகர்ந்து வங்க தேச கடற்கரை கெபுபாரா அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தின் குறுக்கே மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக அமராவதி வானிலை ஆய்வு மைய இயக்குநர் சாமுவேல் ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தொடரும் அமளி: 9-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது!
இன்று மாலை கரையை கடக்க இருப்பதால் அந்தப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.