இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 2 பேர் கைது!

ஜம்மு-காஷ்மீரில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

DIN

ஜம்மு-காஷ்மீரில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாராமுல்லாவின், அசாத்கஞ்ச் பகுதியில் சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியை போலீஸார், ராணுவம், சிஆர்பிஎப் ஆகியோர் சுற்றி வளைத்தனர்.  

இந்நிலையில், லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள், துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

கைது செய்யப்பட்டவர்கள் பாராமுல்லாவில் வசிக்கும் பைசல் மஜீத் கணி மற்றும் பழைய பாராமுல்லாவில் வசிக்கும் நூருல் கம்ரான்கணி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சுதந்திர தினத்தைக் கருத்தில் கொண்டு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT