முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் என்கவுண்டர்: 3 பாதுகாப்புப் படையினர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் இன்று நடைபெற்ற என்கவுண்டரில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். 

Updated On : 4 ஆகஸ்ட், 2023 at 7:47 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் இன்று நடைபெற்ற என்கவுண்டரில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். 

தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹலன் வனப் பகுதியில் பயங்கவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். 

அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement

இருப்பினும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.