கோப்புப் படம். 
இந்தியா

ஹரியாணா கலவரம்: 156 பேர் கைது, 56 வழக்குகள் பதிவு

நூ மாவட்டத்தில் கலவரம் தொடர்பாக இதுவரை 156 பேர் கைது செய்யப்பட்டு 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

நூ மாவட்டத்தில் கலவரம் தொடர்பாக இதுவரை 156 பேர் கைது செய்யப்பட்டு 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹரியாணா மாநிலம், நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் ஊா்வலத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவம், இரு பிரிவினருக்கு இடையே மதக் கலவரமாக மாறியது. இதைத் தொடா்ந்து, அருகிலுள்ள மாவட்டங்களில் கலவரம் பரவியது. இதில் 2 ஊா்க்காவல் படையினா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, நூ மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாகக் கட்டப்படுள்ள கட்டங்களை அகற்றும் பணிகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி கல்வீச்சு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள 3 அடுக்கு மாடி சஹாரா உணவகம் ஞாயிற்றுக்கிழமை இடிக்கப்பட்டது. இந்த நிலையில் கலவரம் தொடர்பாக இதுவரை 156 பேர் கைது செய்யப்பட்டு 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கலவரம் காரணம் இதுவரை 6 பலியானதோடு 88 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறினர்.

இதனிடையே நூ மாவட்டத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களின் நடமாட்டத்திற்காக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. நூ மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பதாவது, திங்களன்று, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது மாவட்டத்தில் வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் இன்று பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்கும் என்றார்.

முன்னதாக நூ மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருகரு கண்களால்... ராஜி எப்படி? ஷாலினி!

DMK-வின் DNA எனக்குத் தெரியும்! - Aadhav Arjuna | Vijay | TVK Special General Committee meeting

உன்னதமானது... ஸ்ரீலீலா!

பாரிஸ் நகர் வீதியிலே... கிமாயா கபூர்!

ஆழிக்கருகில் அன்பின் வெளிப்பாடு... ஸ்வாசிகா!

SCROLL FOR NEXT