புது தில்லி: புது தில்லி காந்தி நகர் பகுதியில் உள்ள பிளைவுட் கடையில் புதன்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து கடையின் உரிமையாளர் அமந்தீப் கூறுகையில், புது தில்லி காந்தி நகர் பகுதியில் உள்ள எனது பிளைவுட் கடையில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு எனது சகோதரரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
இதையடுத்து தீயணைப்பு நிலையங்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பதினொரு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் என்று தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் உயிர்சேதம், காயங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.