இந்தியா

கனமழை: சார்தாம் யாத்திரை ஆக.15 வரை நிறுத்தம்!

உத்தரகண்டில் கனமழை காரணமாக சார்தாம் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில பேரழிவு மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

DIN

உத்தரகண்டில் கனமழை காரணமாக சார்தாம் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில பேரழிவு மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகின்றது. இதனால் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய 
சார்தாம் யாத்திரை இன்றும், நாளையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

உத்தரகண்டில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. 

கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி பக்தர்களின் தரிசனத்துக்காக ஏப்ரல் 22-ம் தேதி அக்ஷய தினத்தன்று தொடங்கியது. 

கேதார்நாத் ஏப்.25-ம், பத்ரிநாத் ஏப்ரல் 27-ம் தேதியும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT