முகப்பு
இந்தியா

சந்திரயான் -3: மனிதகுலத்துக்கான வெற்றி! நரேந்திர மோடி

மனித குலத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:53 AM
பகிர்:

நிலவில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கியது, மனித குலத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இந்தியாவை நினைத்து உலக நாடுகள் பெருமைகொள்ளும் தருணம் உருவாகியுள்ளது.

சந்திரயான் -3 விண்கலன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு கிடைத்த வெற்றி. நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் நமது அடுத்தக்கட்ட திட்டம்.

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் -1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும் எனக் குறிப்பிட்டார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →