முகப்பு
இந்தியா

சந்திரயான் -3 லேண்டிங்: ஹரியாணா பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு!

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதிக்கும் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு ஹரியாணாவில் உள்ள பள்ளிகளில் காட்சிப்படுத்தப்படும் என அம்மாநில கல்வி அமைச்சர் கன்வார் பால் தெரிவித்தார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:53 AM
பகிர்:

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதிக்கும் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு ஹரியாணாவில் உள்ள பள்ளிகளில் காட்சிப்படுத்தப்படும் என அம்மாநில கல்வி அமைச்சர் கன்வார் பால் தெரிவித்தார். 

மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இன்று(புதன்கிழமை) மாலை 5.44-க்கு பள்ளிகளில் இதன் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். 

அதன்படி புதன்கிழமை மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளிகளைத் திறக்க மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வு அனைவரிடத்திலும் ஆா்வத்தையும் மிகுந்த எதிா்பாா்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதோடு, இளைஞா்கள் மனதில் ஆராய்ச்சி மீதான ஆா்வத்தை தூண்டுவதாகவும் அமையும். இந்திய அறிவியல்-தொழில்நுட்பத் திறனுக்கு கிடைக்கப்போகும் இந்த வெற்றி அனைவருக்குமான கொண்டாட்டமாகவும் பெருமையாகவும் அமையும். விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலை ஊக்குவிப்பதற்கான உந்துகோலாகவும் இந்த வெற்றி அமையப்போகிறது என்று அவர் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →