இந்தியா

தில்லியில் அடுத்த 5 நாள்களுக்குான வானிலை நிலவரம்!

தலைநகர் தில்லியில் அடுத்த 5 நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் மழை பெய்யாது என்று கணிக்கப்பட்டுள்ளது.

DIN

புதுதில்லி: தலைநகர் தில்லியில் அடுத்த 5 நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் மழை பெய்யாது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட ஒரு படி குறைவாக 33.2 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி குறைந்து 24.3 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, தேசிய தலைநகரின் 24 மணி நேர சராசரி காற்று தரக் குறியீடு 85ஆக உள்ளது.

பூஜ்ஜியம் முதல் 50 வரையிலான காற்றின் தரக் குறியீடு நல்லது எனவும், 51 முதல் 100 திருப்திகரமானது எனவும், 101 மற்றும் 200 மிதமானது எனவும், 201 மற்றும் 300 மோசமானது எனவும், 301 மற்றும் 400 மிகவும் மோசமானது எனவும், 401 மற்றும் 500 கடுமையானது என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

SCROLL FOR NEXT