முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பாகிஸ்தானின் சிந்துவில் டெங்கு பாதிப்பு 896 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:55 AM
தில்லியில் இதுவரை 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு: 9 பேர் பலி!
பகிர்:

பாகிஸ்தானின் சிந்துவில் டெங்கு பாதிப்பு 896 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ஆகஸ்ட் மாதத்தில் சிந்து மாகாணத்தில் மொத்தம் 731 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. கராச்சியின் கிழக்கு மாவட்டத்தில் 291, மத்திய பகுதியில் 126, கோரங்கியில் 79, தெற்கில் 136, மேற்கில் 20, மாலிர் மற்றும் கீமாரியில் 396 ஆகவும் பதிவாகியுள்ளன. 

அதிகரித்துவரும் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தேசிய சுகாதார நிறுவனம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 

முட்டையிடும் வாழ்விடங்களுக்கு கொசுக்கள் வராமல் தடுப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு புழுக்கள் பரவாமல் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. 

மழைக்காலத்தில் கொசுக்கடியால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர்க்க, முழுக்கால் கொண்ட ஆடைகளை அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →