இந்தியா

ஆதித்யா எல்-1: விண்ணில் பாய்வதற்கான ஒத்திகை நிறைவு!

ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவடைந்ததாக இஸ்ரோ புதன்கிழமை அறிவித்துள்ளது.

DIN


ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவடைந்ததாக இஸ்ரோ புதன்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது.

நிலவின் தென் துருவப் பகுதியில் ‘விக்ரம்’ லேண்டரும், ‘பிரக்யான்’ ரோவரும் தொடா்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த ஆய்வுகள் நிலவு சாா்ந்த புதிய தரவுகளை வழங்கி வருகின்றன. அது எதிா்காலத் திட்டங்களுக்குப் பெரும் பலன் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா-எல்1’ விண்கலத்தை இஸ்ரோ செப்டம்பா் 2-ஆம் தேதி முற்பகல் 11.50-க்கு விண்ணில் செலுத்தவுள்ளது.

இதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ள நிலையில், வரும் சனிக்கிழமை ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வது உறுதியாகியுள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT