தபால் வாக்குகள்: யார் முன்னிலை?
4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிகை நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இதன் ஆரம்பக்கட்டத்தில் சத்தீஸ்கரில் தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் இரு மாநிலங்களிலும் பாஜக தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றன.
இதையும் படிக்க: 4 மாநிலத் தோ்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
தெலங்கானா தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சி 2 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.