இந்தியா

இந்தியாவை அதானி கையில் ஒப்படைத்துவிட்டார் பிரதமர்!: அமைச்சர் உதயநிதி

DIN

பிரதமர் மோடி இந்தியாவை அவரது நண்பர் அதானி கையில் ஒப்படைத்துவிட்டார் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  

கோவையில் நடைபெற்ற இளைஞரணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், மத்தியில் பா.ஜ.க. ரூ.7.5லட்சம் கோடி மதிப்பில் ஊழல் செய்துள்ளதாக சிஐஏ அறிக்கை வெளியிட்டிருப்பதைக் கூறினார்.  

மத்திய அரசிற்கு தமிழ்நாடு ரூ.9.5 லட்சம் கோடி வரிப்பணம் செலுத்தியுள்ளது, எனினும் தமிழ்நாட்டிற்கு வழக்கப்பட வேண்டிய பாக்கி தொகையை இன்னும் அளிக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், நீட் தேர்வால் இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், 70 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகக் கையொப்பமிட்டுள்ளனர் எனவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 

மேலும், திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் 2024 மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன் நடைபெறும் எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT