இந்தியா

உ.பி.:  தண்டவாளம் அருகே பழங்கள் பறித்த சிறுவன் ரயில் மோதி பலி!

DIN

உத்திர பிரதேசத்தில் தண்டவாளம் அருகே புதரில் இருந்து பழங்களை பறித்துக்கொண்டிருந்தபோது 11 வயது சிறுவன் மீது ரயில் மோதியதில் பலியானான். 
உத்திர பிரதேச மாநிலம், பராக்பூர் கிராமத்தில் வசித்த ஷா ஆலம்(11) தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை ரயில்வே தண்டவாளம் அருகே புதரில் இருந்து பழங்களைப் பறித்துக்கொண்டிருந்தான். 
அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மோதியதில் சிறுவன் பலியானான். தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் மோதி 11 வயது சிறுவன் பலியான சம்பவம் உத்திர பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

திருப்பத்தூா் பகுதிகளில் தொடா் மழை: ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் நீா் வரத்து

SCROLL FOR NEXT