இந்தியா

கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை  போலீஸார் கைது செய்தனர். 

DIN

கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை  போலீஸார் கைது செய்தனர். 

கடந்த 11-ம் தேதி இரவு ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தார். 

இதையடுத்து ஆளுநர் மாளிகை முழுவதும் சோதனை நடத்தப்பட்டதில் இது புரளி அழைப்பு என்று தெரியவந்தது. 

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்  பாஸ்கர்(34) பி.காம் பட்டதாரி, விவசாயம் மற்றும் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாவில் உள்ள வடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். 

திங்கள்கிழமை இரவு பெங்களூரு வந்ததாகவும், ஆளுநர் மாளிகை வழியாகச் செல்லும்போது, ​​கூகுளில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண்ணைத் தேடி, உள்ளே வெடிகுண்டு இருப்பதாகக் கூறி அழைப்பு விடுத்துள்ளார். 

தொழில்நுட்ப கண்காணிப்பைப் பயன்படுத்தி, குற்றஞ்சாட்டப்பட்டவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் ஏதோ ஒரு ஆர்வத்திற்காக அழைப்பு விடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT