இந்தியா

சத்தீஸ்கரில் வெடிகுண்டு தாக்குதல்: பிஎஸ்எப் தலைமைக் காவலர் பலி!

DIN

சத்தீஸ்கரின் காங்கேர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்தில் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டார். 

பார்தாபூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சடக்டோலா கிராமத்திற்கு அருகே பிஎஸ்எப் மற்றும் காவல்துறையின் கூட்டுக் குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது. 

நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பிஎஸ்எப் தலைமைக் காவலர் அகிலேஷ் ராய் (45) காயம் அடைந்தார். அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பக்கஞ்சூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

உயிரிழந்த தலைமைக் காவலர் அகிலேஷ் ராய் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

பிஎஸ்எப், மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் மாவட்ட போலீஸ படை ஆகியவற்றின் கூட்டுக் குழு இணைந்து தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT