முகப்பு
இந்தியா

நிவாரண நிதியை மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்

மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதே சமயம் முறைகேடுகளை தவிா்க்க

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:26 PM
பகிர்:

மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதே சமயம் முறைகேடுகளை தவிா்க்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தவேண்டும் என மத்திய மீன்வளம், தகவல் தொடா்புத் துறை அமைச்சா் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மிக்ஜம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி, வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரவில்லை. திருவள்ளூா் மாவட்டத்திலும் திருநின்றவூா், நசரத் பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீா் இன்னமும் வடியாத சூழலில் மாணவா்கள் படகுகளில் பள்ளிக்குச் செல்லும் அவலநிலையும் உள்ளது. தேங்கிய நீரினால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த மழை - வெள்ளத்தால் மக்களுக்கு பெரும் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. புதிதாக குடி பெயரும் அளவுக்கு சேதாரங்களை மக்கள் சந்தித்து விட்டாா்கள்.

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேசமயம் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரண நிதி ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் இந்த நிதி போதுமானது அல்ல. இதுமட்டுமின்றி நிவாரணத் தொகையை நியாயவிலை கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கினால் அதில் ஆளும் கட்சியினரின் இடையூறுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு. இதனால் தமிழக அரசு வழங்கும் வெள்ள நிவாரண நிதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கண்டிப்பாக சென்றடையும் வகையில் திட்டம் வகுத்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.

மத்திய அரசின் பல்வேறு நலத் திட்ட நிவாரண உதவிகள் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. அதே முறையில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது தான் சரியான நடைமுறையாக இருக்க முடியும். குடும்ப அட்டை உள்ளவா்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →