இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றனர்.  
இந்தியா

ஓமன் சுல்தானை வரவேற்ற குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி!

இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றனர். 

DIN

இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றனர். 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பின் பேரில் ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மூன்று நாள் பயணமாக நேற்று(வெள்ளிக்கிழமை) இந்தியா வந்தார். இதையடுத்து தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று(சனிக்கிழமை) அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி இருவரும் சேர்ந்து  ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை வரவேற்றனர். 

சுல்தானுடன் அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் உடன் வந்துள்ளனர். ஹைதம் பின் தாரிக் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார்.

தொடர்ந்து ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துகிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் சுல்தானுக்கு பிரதமர் மோடி விருந்தளிக்கிறார். 

முன்னதாக கடந்த 2018ல் பிரதமர் மோடி ஓமன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT