இந்தியா

மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின் மகளிர் இடஒதுக்கீடு மசோதா: நிர்மலா சீதாராமன்

2024-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு, மகளிர் இட்ஒதுக்கீடு மசோதா அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

PTI

2024-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு, மகளிர் இட்ஒதுக்கீடு மசோதா அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மூட்பித்ரியில் ராணி அப்பாக்காவின் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டுப் பேசிய அவர், 

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கே பிரதமர் மோடி எப்போதும் நம்புவதால் மகளிர் மசோதா உண்மையாகிவிட்டது. 

ஆசாதி கா அம்ரித் மஹோத் சவின் ஒரு பகுதியாக 14,500 கதைகள் கொண்ட டிஜிட்டல் மாவட்ட களஞ்சியத்தை அரசு தொகுத்துள்ளது. இது சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களைச் சிறப்பித்துக் காட்டுகிறது. 

சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு, அரசியலமைப்பு சட்டசபையில் பெண்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் சுதந்திரப் போராட்டத்தின் பழங்குடியின தலைவர்கள் ஆகிய மூன்று புத்தகங்களை வெளியிட அமர் சித்ர கதாவுடன் மத்திய கலாசார அமைச்சகம் இணைந்துள்ளது. 

கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் ராணி அப்பாக்காவின் பெயரில் சானிக் பள்ளி திறக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

நினைவு தபால் தலைக்குப் பயன்படுத்தப்பட்ட ராணி அப்பாக்காவின் உருவப்படத்திற்காக கலைஞர் வாசுதேவ் காமத்தை அவர் வாழ்த்தினார்.

ஸ்ரீ க்ஷேத்ரா தர்மஸ்தலா தர்மாதிகாரி (பரம்பரை நிர்வாகி) வீரேந்திர ஹெக்கடே மற்றும் தலைமை தபால் ஜெனரல் (கர்நாடக வட்டம்) எஸ் ராஜேந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக சினிமா

ஆபரேஷன் சிந்தூர்

தென்னாப்பிரிக்கக் காடுகளில்...

வெளிநாட்டு மண்ணில் முதல்முறை... இந்திய அணியின் தனித்துவமான சாதனை!

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்

SCROLL FOR NEXT