இந்தியா

வாராணசி-தில்லி இடையே 2-வது வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வாராணசி-தில்லி இடையேயான 2-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

DIN

வாராணசி-தில்லி இடையேயான 2-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

செவ்வாய் கிழமை தவிர, வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்த ரயில் வாராணசியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:05 மணிக்கு புதுதில்லி சென்றடையும். பின்னர் மறுமார்க்கமாக மதியம் 3 மணிக்கு தில்லியிலிருந்து கிளம்பி வாராணசிக்கு இரவு 11:05 மணிக்கு வந்தடைகிறது .

தில்லி-வாராணாசி வழித்தடத்தில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் காலை 6 மணிக்கு புதுதில்லியில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு வாராணசியை சென்றடைகிறது. தொடர்ந்து, வாராணசியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் அந்த ரயில் இரவு 11 மணிக்கு புது தில்லி வந்தடைகிறது.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அவரது தொகுதியான வாராணசிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது ரூ.19,000 கோடி மதிப்பிலான 37 திட்டங்களை அவர் தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT