இந்தியா

வாராணசி-தில்லி இடையே 2-வது வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

DIN

வாராணசி-தில்லி இடையேயான 2-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

செவ்வாய் கிழமை தவிர, வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்த ரயில் வாராணசியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:05 மணிக்கு புதுதில்லி சென்றடையும். பின்னர் மறுமார்க்கமாக மதியம் 3 மணிக்கு தில்லியிலிருந்து கிளம்பி வாராணசிக்கு இரவு 11:05 மணிக்கு வந்தடைகிறது .

தில்லி-வாராணாசி வழித்தடத்தில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் காலை 6 மணிக்கு புதுதில்லியில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு வாராணசியை சென்றடைகிறது. தொடர்ந்து, வாராணசியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் அந்த ரயில் இரவு 11 மணிக்கு புது தில்லி வந்தடைகிறது.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அவரது தொகுதியான வாராணசிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது ரூ.19,000 கோடி மதிப்பிலான 37 திட்டங்களை அவர் தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT