கரோனா திரிபு குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை: சௌமியா சுவாமிநாதன்
கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 265 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பாதிப்புக் குறித்து மக்கள் தேவையின்றி அச்சம்கொள்ள வேண்டாம் என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தினசரி தரவுகளில்,
நாட்டில் வியாழக்கிழமை நிலவரப்படி 594 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கரோனா பாதிப்பு செயலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,97 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 265 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறுகையில்,
கரோனா வைரஸின் புதிய மாறுபாடு தோன்றுவது குறித்து அதிகரித்துவரும் கவலைகளுக்கு மத்தியில், கரோனாவின் திரிபு தான் தவிர, தேவையின்றி அச்சம் கொள்ளத்தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். பொதுஇடங்களில் செல்லும் முதியவர்கள் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சோர்வு, காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் உடனே மருத்துவனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என அவர் தெரிவித்தார்.