இந்தியா

3 நாள் வேளாண் கண்காட்சியை நடத்தும் நபார்டு வங்கி!

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான (நபார்டு) 50-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக மூன்று நாள் வேளாண் கண்காட்சியை நடத்தவிருக்கிறது.

DIN

புதுதில்லி: தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான (நபார்டு) 50-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக மூன்று நாள் வேளாண் கண்காட்சியை நடத்தவிருக்கிறது.

தில்லி ஹாட்டில் நடைபெறும் இந்த கண்காட்சியில், 21 மாநிலங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் பங்கேற்பர் என நபார்டு வங்கி தெரிவித்துள்ளது.

இந்த கண்காட்சியில் நபார்டு வங்கி மற்றும் சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு ஆதரவுடன் செயல்படும் 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் முன்னோடித் திட்டத்தின் கீழ், பல்வேறு வகையான இயற்கை மற்றும் சிறுதானிய அடிப்படையிலான வேளாண் பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்த உள்ளனர்.

மேலும் இந்தியாவின் விவசாய நிலப்பரப்பை மாற்றியமைப்பதில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் முயற்சிகள் மற்றும் சாதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை இந்த கண்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

SCROLL FOR NEXT