முகப்பு
இந்தியா

3 நாள் வேளாண் கண்காட்சியை நடத்தும் நபார்டு வங்கி!

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான (நபார்டு) 50-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக மூன்று நாள் வேளாண் கண்காட்சியை நடத்தவிருக்கிறது.

Updated On : 24 டிசம்பர் 2023, 10:55 pm IST
பகிர்:

புதுதில்லி: தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான (நபார்டு) 50-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக மூன்று நாள் வேளாண் கண்காட்சியை நடத்தவிருக்கிறது.

தில்லி ஹாட்டில் நடைபெறும் இந்த கண்காட்சியில், 21 மாநிலங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் பங்கேற்பர் என நபார்டு வங்கி தெரிவித்துள்ளது.

இந்த கண்காட்சியில் நபார்டு வங்கி மற்றும் சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு ஆதரவுடன் செயல்படும் 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் முன்னோடித் திட்டத்தின் கீழ், பல்வேறு வகையான இயற்கை மற்றும் சிறுதானிய அடிப்படையிலான வேளாண் பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்த உள்ளனர்.

Advertisement

Advertisement

மேலும் இந்தியாவின் விவசாய நிலப்பரப்பை மாற்றியமைப்பதில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் முயற்சிகள் மற்றும் சாதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை இந்த கண்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments