இந்தியா

மேகாலயாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்!

மேகாலயாவில் சனிக்கிழமை இரவு முதல் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

மேகாலயாவில் சனிக்கிழமை இரவு முதல் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேகாலயா மாநிலத்தின் தூப்ரி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

முன்னதாக, சனிக்கிழமை இரவு 7.25 மணிக்கு மேகாலயாவின் கிழக்கு காரோ மலைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ரிக்டர் அலகுகளாகப் பதிவானது.

இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளிவரவில்லை.

4 ரிக்டர் வரையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும். இவற்றால் மிக அரிதாகவே சேதங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT