மத்தியப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிங்ரௌலி பகுதியில் இன்று (டிச.31) பிற்பகல் 2.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | புல்வாமா தாக்குதலைப் போல ராமர் கோயிலை தேர்தலுக்காக பாஜக பயன்படுத்துகிறது: காங். அமைச்சர் குற்றச்சாட்டு
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இல்லை.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நேற்று 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
4 ரிக்டர் வரையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும். இவற்றால் மிக அரிதாகவே சேதங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இந்தக் கொடுமையில் பிரதமருக்கும் பங்கிருக்கிறது!: ராகுல் காந்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.