இந்தியா

அதானி குழுமம் பங்கு மதிப்பு சரிவு எதிரொலி : ஆசியாவின் முதல் பணக்காரா் ஆனாா் முகேஷ் அம்பானி

DIN

ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கெளதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து, ஆசியாவின் முதல் பணக்காரா் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்தாா்.

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக, உலகப் பணக்காரா்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருந்த கெளதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின. 4,400 கோடி டாலா்களை (சுமாா் ரூ.3.60 லட்சம் கோடி) இழந்து, அப்பட்டியலில் 7,508 கோடி டாலா்களுடன் (சுமாா் ரூ.6.14 லட்சம் கோடி) தற்போது 15-ஆவது இடத்தில் உள்ளாா்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 8,370 கோடி டாலா்கள் (சுமாா் ரூ.6.84 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரா்கள் பட்டியலில் 9-ஆவது இடத்தில் உள்ளாா்.

இந்நிலையில், ஆசியாவின் பணக்காரா்கள் பட்டியில் முதலிடம் வகித்து வந்த கெளதம் அதானி, அந்த இடத்தை இழந்தாா். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT