முகப்பு
இந்தியா

வாணி ஜெயராம் மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பு: பிரதமர் மோடி

வாணி ஜெயராம் மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:25 AM
பகிர்:

வாணி ஜெயராம் மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், திறமையான வாணி ஜெயராம், பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். 

அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

பிரபல பின்னணிப் பாடகியான வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரின் இல்லத்தில் இன்று பிற்பகல் (பிப். 4) காலமானார். இவர், 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →