இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி வைக்கவுள்ள பிரதமர்!
இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை கர்நாடகத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 6) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை கர்நாடகத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 6) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தினுடைய இந்த கிரீன்ஃபீல்டு ஹெலிகாப்டர் நிறுவனம் முதலில் இலகு ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வாணியம்பாடியில் கூட்ட நெரிசல்: வேட்டி - சேலை பெற வந்த 4 பெண்கள் பலி
Advertisement
Advertisement
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: 615 ஏக்கர் பரப்பளவில் இந்த ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனம் அமையவுள்ளது. இந்த புதிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் வருகை இந்தியாவின் ஹெலிகாப்டர் தேவைக்கு தீர்வாக அமையும். ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் 15 டன் எடையுள்ள 1000 ஹெலிகாப்டர்களை அடுத்த 20 ஆண்டுகளில் தயாரிக்க உள்ளது. இதற்கு 4 லட்சம் கோடி செலவாகும். இந்த புதிய முடிவின் மூலம் இந்தியாவுக்கு இலகு ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படும் ஹெலிகாப்டர்கள் கிடைக்கும்.
இந்த ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனம் பெங்களூருவிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமையவுள்ளது. சுயசார்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (பிப்ரவரி 6) தொடங்கி வைக்க உள்ளார். இந்த ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.