இந்தியா

இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி வைக்கவுள்ள பிரதமர்!

DIN

இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை கர்நாடகத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 6) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தினுடைய இந்த கிரீன்ஃபீல்டு ஹெலிகாப்டர் நிறுவனம் முதலில் இலகு ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: 615 ஏக்கர் பரப்பளவில் இந்த ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனம் அமையவுள்ளது. இந்த புதிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் வருகை இந்தியாவின் ஹெலிகாப்டர் தேவைக்கு தீர்வாக அமையும். ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் 15 டன் எடையுள்ள 1000 ஹெலிகாப்டர்களை அடுத்த 20 ஆண்டுகளில் தயாரிக்க உள்ளது. இதற்கு 4 லட்சம் கோடி செலவாகும். இந்த புதிய முடிவின் மூலம் இந்தியாவுக்கு இலகு ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படும் ஹெலிகாப்டர்கள் கிடைக்கும்.

இந்த ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனம் பெங்களூருவிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமையவுள்ளது. சுயசார்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (பிப்ரவரி 6) தொடங்கி வைக்க உள்ளார். இந்த ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT