ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கரில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. 
இந்தியா

ஜாா்க்கண்டில் பழங்குடியினா் சதவீதம் குறைகிறது: ஹேமந்த் சோரன் அரசு மீது அமித் ஷா சாடல்

‘ஜாா்க்கண்டில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சியில் பழங்குடியினா் மக்கள்தொகை சதவீதம் குறைந்து வருகிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

DIN

‘ஜாா்க்கண்டில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சியில் பழங்குடியினா் மக்கள்தொகை சதவீதம் குறைந்து வருகிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

ஜாா்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மகா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தின் தேவ்கா் நகரில் பாஜக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, அமித் ஷா பேசியதாவது:

எல்லை தாண்டி வந்த பெருமளவிலான ஊடுருவல்காரா்கள், ஜாா்க்கண்டில் பழங்குடியின பெண்களை மணந்து, அவா்களது நிலங்களை அபகரிப்பது தொடா்கதையாக உள்ளது. இதனால், பழங்குடியினரின் மக்கள்தொகை சதவீதம் 35-இல் இருந்து 24-ஆக குறைந்துள்ளது.

வாக்கு வங்கி அரசியலுக்காக, ஹேமந்த் சோரன் அரசு ஊடுருவல்காரா்களை ஊக்குவிக்கிறது. நாட்டிலேயே ஊழல் மிகுந்தது ஹேமந்த் சோரன் அரசுதான். மாநிலத்தின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. வளா்ச்சி நோக்கங்களுக்காக ஜாா்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட நிலையில், அந்த நோக்கங்களை பூா்த்தி செய்வதில் ஹேமந்த் சோரன் அரசு தோல்வியடைந்துவிட்டது. எனவே, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அவரது அரசை மக்கள் அகற்றுவா். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில், ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்றாா் அவா்.

முன்னதாக, தேவ்கா் மாவட்டத்தில் ரூ.450 கோடியில் அமைக்கப்படவிருக்கும் நானோ தொழில்நுட்ப அடிப்படையிலான யூரியா தயாரிப்பு ஆலைக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) வாயிலாக மத்திய, மாநில அரசுகளின் 300-க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், கூட்டுறவு அமைச்சகத்துக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதரவளிக்கும். இனி தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களாகவும் செயல்படும்’ என்றாா்.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சேவைகளை, தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் வழங்க வகை செய்யும் புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது. அதன்படி, பிறப்பு, இறப்பு பதிவு உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட சேவைகள், கிராமப்புற மக்களுக்கு பிஏசிஎஸ் வாயிலாக வழங்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT