கோப்புப்படம் 
இந்தியா

நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு!

அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

DIN

அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே 3 நாள்கள் முடங்கிய நிலையில் 4-வது நாளாக அமளி காரணமாக நாடளுமன்ற இரு அவைகளும் முடக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்த மோசடி குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஒத்திவைப்புத் தீா்மானத்தைத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

அந்தக் கோரிக்கை ஏற்கப்படாததையடுத்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராகவும், அதானி குழுமத்துக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா். 

இதையடுத்து, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியைக் கைவிடாததால், நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT