கோப்புப் படம். 
இந்தியா

மீரட்டில் திருமண குதிரை வண்டி மீது லாரி மோதியதில் குதிரை உட்பட 3 பேர் பலி

மீரட்டில் திருமண குதிரை வண்டி மீது லாரி மோதியதில் குதிரை உட்பட 3 பேர் பலியாகினர்.  

DIN

மீரட்டில் திருமண குதிரை வண்டி மீது லாரி மோதியதில் குதிரை உட்பட 3 பேர் பலியாகினர். 

உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் திருமண ஊர்வல நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு குதிரை வண்டியில் இன்று அதிகாலை 3 நபர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கர்தோனி கிராமம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி திடீரென குதிரை வண்டி மீது மோதியது.

இந்த சம்பவத்தில் குதிரை உட்பட 3 பேர் பலியாகினர். தகவல் அறிந்ததும் ஊரக காவல் கண்காணிப்பாளர் அனிருத் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் அனிருத் குமார் கூறுகையில், மீரட் மாவட்டத்தில் திருமண குதிரை வண்டி மீது லாரி மோதியதில் குதிரையுடன் 3 பேர் பலியாகினர். ஓட்டுநர் தற்போது தலைமறைவாக உள்ளார். விரைவில் கைது செய்யப்படுவார்" என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை: உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ராஜிநாமா!

சத்தீஸ்கரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

SCROLL FOR NEXT