முகப்பு
இந்தியா

நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 157 ஆகப் பதிவு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 157 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா

நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 157 ஆகப் பதிவு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 157 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 157 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 157 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  4.46 கோடியாக (4,46,84,659) உயர்ந்துள்ளது. 

அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,862 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.01 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,30,757 ஆக உயர்ந்துள்ளது. 

நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,52,039 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1 சதவீதமாக ஆக உள்ளது. 

தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.63 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →